2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'என் பேனாவின் நிதர்சனம்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


வடமராட்சி சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய 'என் பேனாவின் நிதர்சனம்' எனும் கவிதை நூல் வெளியீடு 18 ஆம் திகதி கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன்  பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நூலின் வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலர் த.ஜெயசீலன் நிகழ்த்த நூலின் நயப்புரையை கவிஞர்கள் சு.குணேஸ்வரன், எஸ்.வேல்நந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலின் முதல் பிரதியை த.ஜெயசீலனிடமிருந்து மருத்துவ கலாநிதி மா.பிரபாகரன் பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .