2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதப்படுத்திய கருமுட்டையில் 12 ஆண்டுகளின் பின் இரட்டைக் குழந்தை பிரசவித்து சாதனை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த ஆர்ஜென்டினா பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் எயார்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி (வயது 45). அவரது கணவர் கில்லர்மோ ஹூசக்.

இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியடைந்துள்ளார்.

இனி தன்னால் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட அவர், இறுதியாக ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போம் என்று, தனக்கு 33 வயதாக இருந்தபோது ஆய்வகத்தில் பதப்படுத்தி வைத்திருந்த கருமுட்டை கடந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளார்.

அவரது இறுதி முயற்சி இரட்டைப் பலனைக் கொடுத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது வரலாறு.

ஆண்டுகள் கடந்ததும் கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .