2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

1,250 கோடி ரூபாயில் ரஜனி – கமல் படம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய சினிமா வரலாற்றில் அதிகூடிய செலவில் எடுக்கப்பட்ட படம் என பெயரெடுத்திருப்பது 'எந்திரன்...' திரைப்படம். ஷங்கரின் இயக்கத்தில் கலாநிதி மாறன் 160 கோடி இந்திய ரூபாய், அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 400 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 'எந்திரன்' திரைப்படம் உலகளாவிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கலாநிதி மாறன் அடுத்த படத்தயாரிப்பு பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார். அடுத்த படத்திற்கு கலாநிதி மாறன் ஒதுக்கியிருக்கும் தொகை 500 கோடி இந்திய ரூபாய். அதாவது இலங்கை மதிப்பில் 1,250 கோடி ரூபாய்..! இவ்வளவு செலவில் உருவாகும் படத்தினை இயக்கவிருப்பவரும் இயக்குநர் ஷங்கர்தான்.

1,250 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் இணையவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜனியும் உலக நாயகன் கமல் ஹாசனும் இப்படத்தின் மூலம் 30 வருடங்களின் பின்னர் திரையில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் விசேட அம்சம்.

ரஜனி – கமல் கூட்டணியில் அக்காலத்தில் வெளிவந்த படங்கள் சக்கைபோடு போட்டதை யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். மீண்டும் அவர்களை ஒன்றிணைய வைப்பதென்பது எல்லா இயக்குநர்களுக்கும் கனவாகவே இருந்தது. அந்த கனவினை நிஜமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 04 November 2010 09:10 PM

    இளமை ஊஞ்சலாடுகிறது!

    Reply : 0       0

    xxx Monday, 31 January 2011 03:09 PM

    எப்போது அந்த இனிய நாள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .