2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

என் ரசிகர்களை பார்க்க உதவிய கண்கள் அவர்களுக்கே சொந்தம்!

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபஞ்ச அழகியாக தெரிவுசெய்யப்பட்டு, பிரபஞ்சமே பொறாமைப்படும் அளவுக்கு அழகான பெண்ணாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராய். மணிரத்தினத்தினால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர், இன்று உலக பிரபல்யமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். வெறுமனே நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல் சமூகசேவை செய்வதிலும் அதிக அக்கறையுடையவர்.

இந்திய கண் வங்கியுடன் இணைந்து விழிப்பு நடவடிக்கைகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டுவருகிறார். கண் தானம் செய்வது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துமுகமாக தன்னுடைய கண்களை தானமாக வழங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. என்னை மக்களுக்கு பிடிக்கிறது என்றால் அது என் கண்களினால்தான். ஆகையினால் பொதுமக்களுக்கே அந்த கண்களை தானமாக வழங்கிவிடுகிறேன் என பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா ராயினைப் பார்த்து அனைத்து திரையுலகமும் ஆச்சரியப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • Riyaz Tuesday, 31 August 2010 01:24 PM

    Great varthaikalillai sollvathatkku!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .