2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவதார் போன்று ரஜனியின் 'ஹரா'

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எந்திரனுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் 'சுல்தான் தி வாரியார்'. ஆனால் இன்னமும் அந்த படத்தின் வேலைகள் முடிவடையவில்லை. காரணம் அனிமேஷன் திரைப்படம் என்பதுதான். இந்தியாவில் முதன்முதலாக உருவாகும் முழு நீள 3D திரைப்படம் 'சுல்தான் தி வாரியார்' என்பது இதன் சிறப்பாகும்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்பத்திற்கு இப்பொழுது 'சுல்தான் என்கிற ஹரா' என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 5 பாடல்களும் உருவாகியிருக்கின்றன. ரஜனி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கிறார். பாடல்களையும் அநேகமாக அவர்தான் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கிறபிக்ஸ் வேலைகள் அனைத்தையும் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் கவனிக்கிறார்.

'அவதார்' படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்படும் இத்திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • faiz Monday, 25 October 2010 03:51 PM

    oru maaperum nadihar Rajinikanth ivarai vaithu animation film aduppathu poruththama? ithu avarathu unmayana thiramayai paathikkaatha?..........avarai avarahave paarka virumpuhinrom....

    Reply : 0       0

    xlntgson Thursday, 18 November 2010 08:37 PM

    இளமை ஊஞ்சலாடுகிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .