2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சரவைப் பேச்சாளராக தயாசிறி

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை இணைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே, அவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், நேற்றுப் பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்படி, இன்று நடைபெறவுள்ள, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், அமைச்சர் தயாசிறி பங்குகொள்வார் எனவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .