2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரச அதிகாரிகளுக்கு அழைப்பு

Editorial   / 2017 மே 28 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பை அழித்தல் தொடர்பாக, கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு, அனைத்து அரச அதிகாரிகளுக்கும், தொழில்நுட்ப, தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அழைப்​பு விடுத்துள்ளார்.   

குறித்த கலந்துரையாடல், எதிர்வரும் புதன்கிழமையன்று இடம்பெறவுள்ளது.   

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், சுகாதார சேவைகள் பிரிவின் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

கொழும்பு மாவட்டத்துக்குள் பரவி வரும் டெங்கு நுளம்பை அ​ழித்து மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமொன்றை உருவாக்குவதற்காக, இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .