2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசிரியை மீது தாக்குதல்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலையிலிருந்து மூதூர் பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை,  இனந்தெரியாத இருவர் தாக்கி, 15 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று,  இன்று காலை (21), மூதூர் இறால் குழி பகுதி பிரதான வீதியில்  இடம் பெற்றுள்ளது.

மூதூர் கஜமுக தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும், 55 வயதுடைய ஆசிரியையே தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், மூதூர் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .