2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இருவரை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜின் – நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்  என ஒன்றிணைந்த எதிரணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரபல அமைச்சர்கள் இருவர், கிங் – நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் பாரிய ஊழல் மோசடியை செய்துள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டிய சுசில் பிரேமஜயந்த எம்.பி, குறித்த இருவரையும் ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொண்டு, கண்டறிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புஞ்சி பொரளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X