2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இலங்கைக்கான பயண கட்டுப்பாட்டு எச்சரிக்கை அமெரிக்காவினால் ரத்து

Super User   / 2010 மே 27 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு எச்சரிக்கையை  அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாட்டு  எச்சரிக்கையை ரத்துச் செய்வதாக அமெரிக்கா இராஜங்கத் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இலங்கையில் 27 வருடகாலமாக இடம்பெற்றிருந்த  யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் இதற்கான அறிவித்தலை விடுத்தது.

கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இனிமேல் இல்லை எனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டது.









You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 27 May 2010 09:41 PM

    நற்செய்தி! நன்மாராயம்!! சுவிசேஷம்!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .