2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையருக்கு பாதிப்பில்லை ; அணிக்கும் ஆபத்து இல்லை

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லை என்று அவ்வணியின் முகாமையாளர் ரஞ்சித் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.   

பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து, இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால் உள்ள ஹோட்டலிலேயே இலங்கை அணியினர் தங்கியிருக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .