2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு;அரசு மறுப்பு

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்த அமைப்பு இலங்கையில் தங்கியிருக்கிறது என்று நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு  அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆராம்பித்துள்ளது தொடர்பில் அரசாங்கத்திற்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

இதேவேளை, இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 30 March 2010 09:47 PM

    லஷ்கர் இ தொய்பா பற்றி ஏன் அமெரிக்காவுக்கு- இந்தியாவுக்கு இல்லாத கவலை? இலங்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள் தெரியவில்லையே ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகிக்க வைக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .