2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை-இந்தியாவுக்கிடையில் விரைவில் கப்பல் சேவை ஆரம்பம்-அசோக் கே.காந்தா

Super User   / 2010 மே 05 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெகு
விரைவில் கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

இந்த கப்பல் சேவையானது தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அலுவலகமொன்று யாழ். குடாநாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 05 May 2010 10:02 PM

    விமான சேவையை விட ஐந்து மடங்கு கட்டணம் குறைவாகவும் பொருட்கள் ஐம்பது கிலோவாவது கட்டணம் இன்றி கொண்டுபோக அனுமதிக்காவிட்டால் இதுவும் பணம் சம்பாதிக்கிறவர்களுக்கு வழி விட்டு உறவினர்களை சந்திக்கிறவர்களை தடுக்கின்ற சேவையாகிவிடும்.
    விமான சேவைகள் இலாபம் தேட அனுமதிக்கிற பழைய சூழ்ச்சியே ஆகும், இந்தியாவின் மாநிலங்களின் ஒன்றாக வடக்கு ஆகிவிடும் என்று கூறும் கடும் போக்காளர்க்கு பணிந்து, கடத்தல் குற்றங்கள் ஜோடிக்கப்பட்டு கால நிலை காரணமாக திடீர் என்று நிறுத்தப்படும். இந்திய மயமாக்கல் என்று கூறி சீனப் புகழ் பாடுவர்.

    Reply : 0       0

    nuah Wednesday, 05 May 2010 10:06 PM

    வரவேற்க வேண்டியதே என்றாலும் இந்தியாவில் குடும்பம் உள்ளவர்களுக்கு சலுகைக்கட்டணம் அனுமதிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் வியாபார நோக்கங்களுக்காக போகின்றவர்கள் ஆக்கிரமித்துக்கொள்வர்.

    Reply : 0       0

    srikant Wednesday, 05 May 2010 10:10 PM

    வைகோ போன்றவர்கள் வழி மறிக்காவிட்டால் சரி, அரசியல் மயமாதல் இதில் இருக்கக்கூடாது. கால நிலையைக்கருதி தடை செய்வதை விடுத்து கொழும்பில் இருந்தும் ஒரு சேவை ஏற்படுத்த இயலும்.

    Reply : 0       0

    sisra Wednesday, 05 May 2010 10:16 PM

    இந்தியர்கள் வந்து இங்கு நிறைந்து விடுவார்கள் மூட்டை முடிச்சுகளோடு, கவனம். முன்பு இவர்கள் கோட்டை புகையிரத நிலையத்தில் எங்கு பார்த்தாலும் படுத்துத் தூங்குவதைக் காணக் கூடியதாக இருந்தது. ராமானுஜம் என்ற ஒரே படகுச் சேவை இருந்த காலம் 'எண்பத்தி இரண்டாம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

    Reply : 0       0

    Selvarajah Saturday, 08 May 2010 05:55 PM

    இது அருமையான யோசனை. தங்கள் உறவினர்களை போய் பார்பதற்கு உதவும் ஒரு நல்ல திட்டம். இதை முறையாக பயன் படுத்தினால் நன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X