2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை, இந்திய நாடுகள் இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து-கெஹலிய

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், 3 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்போதே இரு நாடுகளுக்கும் இடையிலான  உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலார்கள் மாநாட்டில் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

பிரதானமாக பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய உடன்படிக்கைகளில்  கைச்சாத்திடப்படருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை இருப்பதால், புதிய பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கான வாய்ப்பு கிடையாது எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 04 June 2010 09:33 PM

    வர்த்தக ஒப்பந்தங்களுக்கு பயப்படும் நாடு இலங்கையல்ல என்பதை அரசு போராடும் சிலருக்கு உணர்த்த வேண்டும். பரஸ்பரம் அல்லது இருதரப்பு என்றால் என்ன என்றே பலருக்கு தெரியவில்லை தேசிய நலன்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது அல்ல இது இரு தேசங்களின் நன்மையையும் கருத்திற் கொண்டே செயல்படும், செயல் படுத்தப்படும். இந்தியாவை எப்படியும் ஓரங்கட்டி நடக்க வியலாது மிக முக்கியமாக அண்டைநாடு எதையுமே புறக்கணிக்க நினைக்கவும் கூடாது, அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். பொருட்கள் தட்டுப்பாடு விலையேற்றம் கட்டுப்படுத்தவியலாது.

    Reply : 0       0

    nuah Sunday, 06 June 2010 09:45 PM

    இது இலங்கை பாகிஸ்தானோடு சீனாவோடு செய்யும் ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தும் என்கிறார்கள் உண்மையா என்று பார்த்து அந்த ஷரத்துகளை நீக்கிவிடுமாறு கூற வேண்டும். மற்றபடி இந்தியமயமாகும் என்பதெல்லாம் பூச்சாண்டி! இந்திய பொருட்களை வாங்கவேண்டாம் என்று கூட இந்தியப்படை இங்கிருந்தபோது தடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. விலை குறைந்த அதேநேரம் சற்றே தரம்வாய்ந்த பொருட்களையே மக்கள் தேர்ந்தெடுப்பர், ஆகவே இந்திய பொருட்களுக்கு கிராக்கி இருந்து கொண்டே இருக்கும். மூலப்பொருள்களும் இந்தியாவில் இருந்து வந்தால் தான் கட்டுபடியாகும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .