2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை முழுவதும் பொலிஸ் பதிவுக்கு உத்தரவு-பொலிஸ் பேச்சாளர்

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

இப்பதிவு நடவடிக்கை வெள்ளவத்தை பகுதியில் மாத்திரமல்லாமல் முழு இலங்கை முழுவதும் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  பிரசாந்த ஜெயகொடி குறிப்பிட்டார்.

இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதற்கு  பிரதான காரணம் என்னவென்று வினவிய போது, இந்த பதிவு நடவடிக்கை  பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். (RA)

You May Also Like

  Comments - 0

  • alga Friday, 09 July 2010 03:38 AM

    வேடிக்கையும் விநோதமும் கொண்ட நாடு இலங்கை.

    Reply : 0       0

    alga Friday, 09 July 2010 03:40 AM

    அவசரகால சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் தமிழர்கள் மட்டும் பதிவதில் நியாயம் இல்லை, அப்படி என்றால்,
    3இன மக்களும் பதியப்பட வேண்டும்.

    Reply : 0       0

    koneswaransaro Friday, 09 July 2010 01:53 PM

    தமிழ் அமைச்சர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை.அரசின் தயவில் வயிற்றைக் கழுவுபவர்கள் எங்கள் விடயத்தில் எப்படி மூச்சுடன் குரல் எழுப்புவார்கள்?

    Reply : 0       0

    xlntgson Friday, 09 July 2010 09:42 PM

    அவசர கால சட்ட விதிகள் தளர்த்தப்பட்டதாக கூறப்பட்டது பொய்யா? அவசர கால நிலைமை நீடிக்கப்படுவதன் பொருள் இதுதானோ? வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்களது தமிழ் ஊடக செயலரின் கவனத்துக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .