2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

50 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் சீன பிரஜை கைது

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சீன பிரஜை ஒருவரை  நேற்று  வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 25 கிலோ கிராம் வல்லப்பட்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டை தொகையானது சுமார் 50 இலட்சம்  ரூபாய் பெறுமதியானது என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .