2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மறைந்த உறுப்பினரின் நினைவுதினம் ஜூன் 19இல்

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வருடங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா உள்ளிட்ட 12 பேரின் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் மேற்படி நினைவுதினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 19ஆம் திகதியை ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X