2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசெம்பர் மாதம் வெளியீடு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசெம்பர் மாதம் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசெம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என, ஆணையாளர் நாயகம் சனத்  பூஜித கூறியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை  கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 37, 704 ஆயிரம் பரீட்சார்திகள் பரீட்சை எழுதினர்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நாடு முழுவதிலுமுள்ள 4987 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X