2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்    

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் நாளைய (21) விசேட அமர்வுக்கு,  ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்களென, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு, நாளை (21) பிற்பகல் 2 மணி முதல்  5 மணி வரை  நடைபெறவுள்ளது. 

கிளிநொச்சி சேவைச் சந்தையின் புதியக் கட்டடம் தொடர்பாகவும் கரைச்சி பிரதேச சபையின்  2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில்  உறுப்பினர்களுக்கான நிதி ஓதுக்கீடு பற்றியும் ஆராய்வதற்காக, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, நாளை விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காகவே, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .