2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை வெளியிட அரசு கோரிக்கை

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரி  ஊடக அமைச்சு கடிதமொன்று அனுப்பிவைத்துள்ளது.

அடுத்த மாதம் முடிவடைவதற்கு முன்னர், தமது சொத்து விபரங்களை தெரியப்படுத்துமாறு கூறி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யு. கனேகல டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

1988ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சொத்து விபர வெளியீடு தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து பத்திரிகை ஆசிரியர்களுக்கும் தான் கடிதம் அனுப்பிவைத்திருந்ததாகவும் டபிள்யு.கனேகல குறிப்பிட்டார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .