2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுசில் கிந்தெல்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு; விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2010 மே 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டிய பிணையில் செல்வதற்கான மனு கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் குமாரி அபயரட்னவினால் இன்று நிராகரிக்கப்பட்டது. 

அத்துடன் இவர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய உட்பட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் உத்தரவு ஜூன் 3வரை நீடிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும்  பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .