2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு பொதுமன்னிப்பு; அமெரிக்கா வரவேற்பு

Super User   / 2010 மே 04 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு உலக ஊடக சுதந்திர தினமான சிறந்த சந்தர்ப்பத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும்  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும்  உள்ள ஊடகவியலாளர்கள் இதனைக் கொண்டாட வேண்டும் எனவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு
ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த
சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை
வெளியிட்டாரென்றும்,  இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம்
பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ.எஸ்.திஸாநாயகம்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவசரகால சட்டவிதிகளின் கீழும் ஜெ.எஸ்.திஸாநாயகம்  கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .