2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு அவசியம்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் தோல்வியானது எமக்கு சிறந்த படிப்பினையைத் தந்துள்ளது. இதை சிறந்த பாடமாக எடுத்து, நாம் முன்னோக்கிச் செல்வோம் எனத் தெரிவித்த இம்ரான்  எம்.பி, ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்பட   வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

கொழும்பில்  இன்று (21) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தத் தேர்தலில் மட்டுமல்லாமல், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போதும், சிறுபான்மை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா,மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கே வாக்களித்துள்ளனர்.

ஆகவே, இந்தத் தேர்தலில் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததை இனவாத ரீதியில் நோக்கக் கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்களிக்காமல், சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்துள்ளர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினருக்கு குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு சிறந்த செய்தி ஒன்றை கூறியுள்ளது. பெரும்பான்மை மக்களிடத்தில் எவ்வாறு இனவாத பிரசாரங்கள் கலையப்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ அதேபோல், எம்  மத்தியிலும் அது நிகழ வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு, சிறுபான்மை கட்சிகள் தமது அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

அத்துடன், தேர்தல் தோல்வியானது, எமக்குக் கிடைத்த சிறிய பின்னடைவே. எமது ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு விரைவில் முன்னோக்கி வருவோம். அதற்கு முன்னர் கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே, எமது எதிர்பார்ப்பு அதற்காக நாம் போராடுவோம் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .