2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐ.தே.கவிலிருந்து விலகுவதற்கு பாலித ரங்கே பண்டார தீர்மானம்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகுவதற்கு அல்லாவிடில் அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருப்பதாக அந்தக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பாலித ரங்கே பண்டார  தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் சாந்த அபயசேகர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் எடுக்காது கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, பாலித ரங்கே பண்டார இவ்வாறு கூறினார். 

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பதாகவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

தன்னைத் தெரிவு செய்த மக்களுக்காக தான் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஏனைய கட்சியில் இணையவிருப்பதாகவும், அவ்வாறு அல்லாவிடில் அரசியலிருந்து தான் ஓய்வுபெறவிருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை பகிஷ்கரிக்கத் தீர்மானித்திருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்த பாலித ரங்கே பண்டார, எனினும்,  கட்சியிலிருந்து விலகுவது தொடர்பில் தான் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாந்த அபயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை பாலித ரங்கே பண்டார  கண்டித்திருந்தார்.

சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .