2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.தே.க - பாலித ரங்கே பண்டார பிளவு

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அந்தக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கும் இடையிலான பிளவு வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், பாலித ரங்கே பண்டார தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் எழுத்து மூலம் அவர் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக சட்டத்தரணி அசேந்திர சிறிவர்த்தன தலைமையில் ஒழுக்காற்றுக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.

ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். 

இதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் டெயிலிமிரர் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதற்குப் பதிலளித்த அவர், மேற்படி தாக்குதலின் பின்னர் வாய்மூலமாக மாத்திரமே முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் தான் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும், ஏனெனில், தான் தாக்குதலுக்குள்ளான நிலையில் பல வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகுவதற்கு அல்லாவிடில் அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருப்பதாக பாலித ரங்கே பண்டார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X