2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனம்;ரஷ்ய அரசாங்கம் கண்டனம்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் ரஷ்ய அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபை இலங்கையுடன் ஆலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும்  ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி நிபுணர்கள் குழுவானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் என்பது தொடர்பிலும் தமது நாடு கவனத்திற்கொண்டிருப்பதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.

தேசிய அடிப்படையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் விசாரணை நடவடிக்களை  தமது நாடு கவனத்திற் கொண்டிருப்பதாகவும்  ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .