2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா நிபுணர் குழு;ஜப்பான் மறுப்பு

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பில் பங்குபற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜப்பான் நாட்டு உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்திருப்பதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டு உயர் அதிகாரியின் பெயரை தெரிவிக்க மறுத்திருக்கும் இராஜதந்திரத் தகவல்கள், அவர் புகழ் பெற்ற ஜப்பான் நாட்டு அதிகாரி எனவும் குறிப்பிட்டது. முன்னாள் சமாதானத் தூதுவர் யசுஷி அகாஷியாக இருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.
 
நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண மற்றும் தனது பிரதானி  விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில்  அவர்  கூறினார்.

கூடிய விரைவில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியென் பெஸ்கோ, இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பான்கீமூன் குறிப்பிட்டார்.

நிபுணர்கள் குழு இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை எனவும்,  கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும் இராஜதந்திர தகவல்கல் குறிப்பிட்டன.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .