2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபான இம்ரான் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது உதவியாளர் ஒருவர் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரை விடுவிக்குமாறு டுபாயில் இருந்து பொலிஸ் அதிகாரியொருவரை அச்சுறுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .