2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கோட்டாபய ஜனாதிபதியாக செயற்பட முடியாது’

Editorial   / 2019 நவம்பர் 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை இன்னமும் துறக்கவில்லை என்பதை, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தின் பட்டியல் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

‘2019 ஜனாதிபதி தேர்தல் இப்போது உத்தியோகப்பூர்வமான ஒரு இலங்கையருக்கும் ஒரு அமெரிக்கருக்கும் இடையிலான போராக மாறியுள்ளது. அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களின் மூன்றாவது பட்டியலிலும், கோட்டாபய  ராஜபக்ஷவில் பெயர், இல்லை.

அவர் இன்னமும் அமெரிக்காவின் குடிமகனாகவே இருக்கிறார். கோட்டாபய  ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டாலும்  இலங்கையின் ஜனாதிபதியாக செயற்பட முடியாது.

முன்னைய காலாண்டு அறிக்கையில், கோட்டாபய  ராஜபக்ஷவின் பெயர் இருக்காத போது, மூன்றாவது காலாண்டு அறிக்கையில் நிச்சயமாக அது இடம்பெறும் என்று  அவரது பேச்சாளர்கள் கூறியிருந்தனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .