2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கடந்தகால அரசியல் கலாசாரத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்'

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த கால அரசியல் கலாசாரத்தை மக்கள் வெறுத்துள்ள நிலையில்,  அதிலிருந்து விலக வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், “கடந்த கால அரசியல் கலாசாரத்தை மக்கள் வெறுத்துள்ளனர். நாங்கள் அதிலிருந்து விலகி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புதிய யுகத்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நாட்களில் உங்களுடைய அதியுட்ச திறமைகளை பயன்படுத்தி மக்களுக்கு நாங்கள் வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்ற உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .