2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி தவறுதலாக வெடித்ததில் பிரான்ஸ் தொழில்நுட்பவியலாளர் பலி

Super User   / 2010 மே 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கண்ணிவெடியொன்று தவறுதலாக வெடித்ததில் பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவீஸ் நாட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிந்த கண்ணிவெடியொன்றை மீட்க முயற்சித்தபோது அது தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மேற்படி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும், மருத்துவக் குழுவைச் சேர்ந்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .