2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்கிசையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவர் கைது

Super User   / 2010 மே 18 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு புறப்படவிருந்த நிலையில், கல்கிசையில் வைத்து அவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் காயமடைந்திருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீதரன் ஐங்கரன் என குறித்த நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாரியளவிலான ஆயுதங்கள் மற்றும் யுத்தத் தளபாடங்களை குறித்த நபர் வைத்திருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்ததை அடுத்து, பொலிஸார் அவற்றினைக் கைப்பற்றியுள்ளனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .