2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனை ஆர்ப்பாட்டம்; அரச அதிபரின் உறுதிமொழியைஅடுத்து நிறைவு

Super User   / 2010 ஜூன் 16 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்  சற்று முன்னர் நிறைவடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கல்முனையில்  கட்டப்பட்ட 456 வீடுகளையும், எதிர்வரும் திங்கட்கிழமை தான் நேரடியாக வந்து கையளிப்பாதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஹன்னங்கர கல்முனை பிரதேச செயலாளரினூடாக வாக்குறுதி அளித்தார்.

இதனை அடுத்தே மேற்படி ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததாக மேலும் அந்த தகவல்கள் தெரிவித்தன.(R.A)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .