2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலஹா வைத்தியசாலையை திறக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 28ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டுள்ள, கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்கக்கோரி, கலஹா நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வைத்தியரையும் தாக்க முற்பட்டதால், காலவரைய​றையின்றி வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால், நோயாளர்கள் தெல்தோட்டை, பேராதனை வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வைத்தியசாலையை திறக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .