2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் இதுவரையில் 58,897 பொதுமக்கள் மீள்குடியேற்றம்

Super User   / 2010 மே 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 15ஆம் திகதி வரையில் மாத்திரம் 18,802 குடும்பங்களைச் சேர்ந்த 58,897பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

யுத்தத்தின் போதான இடம்பெயர்வுகளுக்கு முன்னர், குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 42,115 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,166பேர் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

You May Also Like

  Comments - 0

  • divakar Monday, 31 May 2010 07:32 PM

    வரவேற்கத்தக்க விடயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .