2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

30 வருடங்களின் பின் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்க ஏற்பாடு

Super User   / 2010 மே 07 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் நீதித்துறையினை நிலைநாட்டும் முகமாக, கடந்த 30 வருடங்களிற்குப் பிற்பாடு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது.

இந்நீதிமன்ற நிகழ்வை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இம்மாவட்ட நீதிமன்றத்திற்கான நீதிபதியாக பெ.சிவகுமார் நீதிச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டிடம் சேதமடைந்துள்ள காரணத்தால் தனியார் கட்டிடம் ஒன்றிலேயே இந்நீதிமன்றம் இயங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X