2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு நாலந்தா கல்லூரி அதிபர் கைது (UPDATE)

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அக்கல்லூரியின் அதிபர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 

02:32 PM

நாலந்தா அதிபருக்கு அழைப்பு

கொழும்பு நாலந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அக்கல்லூரியின் அதிபர் ரஞ்சித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கல்லூரியின் அதிபர், மாணவர்கள் சிலரின் துணையுடன் தம்மை தாக்கியதாகக் கூறி அப்பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியரான சுசந்த ஹேரத் என்பவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, குறித்த கல்லூரியின் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X