2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைச்சால் இன்று (28) வெளியான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“குறித்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் தகவல் கிடைத்ததும் இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை சுமுகமாகவும், நிறுவப்பட்ட நடைமுறையின் பிரகாரமும் முன்னெடுப்பதற்காக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, விசாரணை குறித்த தற்போதைய தகவல்களை வழங்குவதற்காக விரைவில் சுவிஸ் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 

இலங்கையில் இராஜதந்திரப் பணிகள் சீராக இயங்குவதற்கு வசதியாக, இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்திற்கு (1961) ஒரு அரச தரப்பாக பொறுப்பேற்றுள்ள கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .