2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்றுலாப் பயணிகள் மீது குளவி கொட்டு

Thipaan   / 2016 ஜூலை 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியவுக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 8 பேர் உட்பட 14 பேர் குளவி கொட்டுக்கிலக்காகி கிம்புஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் ஆணொருவரும் 4 பெண்களும் 3 ஆண் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, உள்ளூர் சுற்றுலா பயணிகளில் 3 ஆண்களும் 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பெண் ஒருவரும் உள்ளூர்வாசி ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .