2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

Kanagaraj   / 2016 ஜூலை 18 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், ராமலிங்கம் பவித்ரா என்ற 5 வயதான சிறுமி மரணமடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்திலேயே இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40க்கு இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என்றும், பிரேரத பரிசோதனைகள்

இடம்பெறுவதாகவும் நாவலப்பிட்டி வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .