2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை; அழைப்புக்கு காத்திருக்கும் கூட்டமைப்பு

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.  

இந்நிலையில் குறித்த அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தயாராக உள்ள போதிலும் அதற்கான அழைப்பொன்றும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்றும் இரா.சம்பந்தன் கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு உட்பட சில விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் வெகு விரைவில் பெச்சுவார்த்தையொன்று இடம்பெறும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .