2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜெர்மனியில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த நபர் கைது

Super User   / 2010 மார்ச் 26 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளின் தீவிர  ஆதரவாளராகவும்,நிதி சேகரிப்பாளர் என்றும் கருதப்படும் நபர் ஒருவர் ஜெர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று இவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் என ஜெர்மனிய ஊடகம் தெரிவித்துள்ளது.2002 ஆம் ஆண்டிலிருந்து புலிகளுக்கான நிதி சேகரிப்பில் இந்நபர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

61 வயதான இந்நபர் ஆயுதக்கடத்தல்,விடுதலைப்புலிகளின் ஜெர்மனிய கிளையான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு என்ற பெயரில் நிதி சேகரித்தல் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

2006 மே மாததிலிருந்து விடுதலைப்புலிகல் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X