2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஞானசாரருக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2017 மே 25 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமையில் குறுக்கிட்டமை, இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் கூறியது.

அவரைக் கைது செய்வதற்காக, நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை விட்டு அவர் தப்பிச் செல்லமுடியாத வகையில், தடையுத்தரவொன்றை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தலைமையகம் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .