2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து யாழ். செல்லும் அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராய்வு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராயவுள்ளார்.

இதற்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் சனிக்கிழமை தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள், இதில் கலந்துகொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .