2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனுன-வர்த்தக நிலைய பணிப்பாளர் தொடர்பு;விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட  வர்த்தக நிலையமொன்றின் பணிப்பாளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இவரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்தது.

குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி  குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த 30ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .