2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனுன திலகரட்னவின் சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுக்கு சொந்தமாகவுள்ள சொத்துக்களை முடக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தனுன திலகரட்ன இன்று காலை 9 மணிக்கு  நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

தனுன திலகரட்னவை இந்த மாதம் 30ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை ஒட்டுமாறு  குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக 7 வங்கிக் கணக்குகளில் 15 மில்லியன் ரூபா மற்றும் 1251 அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டிருக்கும் நிலையில், அவற்றினை  முடக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தெரிவித்தது.

இதேவேளை, தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக ஏனைய சொத்துக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .