2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துப்பாக்கி பிரயோகம்; அதிருப்தியில் கோட்டாபய

Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நிரூபிக்கப்படுமாயின், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.

அந்த பதிவில், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பில் வருத்தமடைகின்றேன். இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் இது தொடர்பில் உரிய பிரிவுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதனை முதன்மையாக கருதும் எனது கொள்கையை மீண்டும் உறுதி செய்கிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X