2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டமைப்பு உறுப்பினர் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யார் பங்குபற்றுவது என்பது குறித்து  இன்று மாலை 5 மணிக்கு முடிவெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன்னர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தற்போது தாம் கொழும்பு நோக்கி புறப்பட்டிருப்பதாகவும் பா.அரியநேத்திரன்  குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .