2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழிற்றுறையினருக்கு வீடமைப்புச் செயற்றிட்டம்

Editorial   / 2017 மே 31 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிபிட்டிய, வீரமாவத்தையிலுள்ள தொழிற்றுறையினர்களுக்கான வீடமைப்புச் செயற்றிட்ட வரைபை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம், பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் தொழிற்றுறையினர்களுக்கு 500 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.  

அதனடிப்படையில், அவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் அடிப்படையில், உரிய ஒப்பந்தத்தை வழங்குவது தொடர்பில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .