2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீவிபத்தினால் தொழிற்சாலை தீக்கிரை

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

நாவலபிட்டி, கொரக்காபொல  டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில், இன்று அதிகாலை ஏற்பட்டத்  தீயினால்,  தொழிற்சாலை முற்றுமுழுதாக ஏரிந்து நாசமாகியுள்ளது

கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பௌர்ணமி விடுமுறையினால் தொழிற்சாலை பணிக்கு ஒருவரும் அமர்த்தப்படவில்லை என்பதால், எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்சாலையிலிருந்த தேயிலைத்தூள் மற்றும் இயந்திரங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .